உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: 12 பதக்கங்கள் வென்று இந்தியா அசத்தல்

கோபே: ஜப்பானின் கோபே நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிநடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான குண்டு எறிதலில் எஃப் 46 பிரிவில் இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் தனது சொந்த ஆசிய சாதனையையும் முறியடித்துள்ளார். கடந்த ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.21 மீட்டர் தூரம் எறிந்திருந்தார்.

சச்சின் சர்ஜேராவ் கிலாரி கூறும்போது, “தங்கப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். அங்கேயும் தங்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்