9.4 ஓவரில் முடிந்த மேட்ச்.. - வெறித்தனம் காட்டிய அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட்  @ ஐபிஎல்

ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி வெறித்தன வெற்றியை பதிவு செய்தது.

166 ரன்கள் இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். கடந்த சில போட்டிகள் இருவருக்கும் சரியாக அமையாத நிலையில், இன்று மீண்டுமொரு சிறப்பான தொடக்கம் கொடுத்து, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். லக்னோ பவுலர்களை இருவரும் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் விளையாடினர். அதிலும் ருத்ரதாண்டவம் ஆடிய டிராவிஸ் ஹெட் 16 பந்தில் அரை சதம் அடித்து அசத்த, அவரை தொடர்ந்து அபிஷேக் சர்மா சில நிமிடங்களில் அரை சதம் அடித்தார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்