எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: பெங்களூருவின் வெற்றி நடை தொடருமா?

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு கட்டத்தில் லீக்சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்யும் சூழ்நிலையில் இருந்தது. ஆனால் தொடர்ச்சியான 4 தோல்விகள் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது ஆகியவற்றால் லீக் சுற்றில் 3-வது இடத்தை பிடித்தது. மறுபுறம் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லீக் சுற்றின் முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி அடைந்த நிலையில் அதன் பின்னர் போராட்ட குணத்துடன் செயல்பட்டு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெளியேற்றி பிளே ஆஃப் சுற்றில் கடைசிஅணியாக கால்பதித்தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்