“ஓய்வுக்கு பிறகு தொழில்முறை கிரிக்கெட் விளையாடுவது எளிதல்ல” - தோனி

ராஞ்சி: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இந்த சூழலில் நிகழ்வு ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்று பேசி இருந்தார். அதனை யூடியூப் சேனல் ஒன்று பகிர்ந்துள்ளது.

அதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தொழில்முறை கிரிக்கெட் விளையாட தான் எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசன் தான் தோனி பங்கேற்று விளையாடும் கடைசி சீசனாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. ஏனெனில், அடுத்த சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது காரணமாக சொல்லப்பட்டது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்