கோவில்பட்டி: கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 13-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் காலை இன்று 7 மணிக்கு தொடங்கின.
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் நடந்த தொடக்க விழாவில், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமை வகித்தார். இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரரும், சென்னை ரிசர்வ் வங்கி மேலாளருமான ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகள் ஜூன் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இப்போட்டிகள் கால் இறுதிக்கு முந்தைய ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்