டி20 உலகக் கோப்பையில் அரை இறுதி வாய்ப்பு யாருக்கு...?

கிங்ஸ்டவுன்: சூப்பர் -8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ளன. இதில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிக்குச் செல்லும்.

தற்போது இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியின் நிகர ரன் விகிதம் 2.425-ஆக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று 3-வதுஇடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் விகிதம் 0.223-ஆகஉள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியும் 2 போட்டிகளில விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் விகிதம் -0.650-ஆக உள்ளது. வங்கதேச அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி கண்டு கடைசி இடத்தில் உள்ளது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்