‘21 டாட் பந்துகள், 4 விக்கெட்கள்’ - தன்சிம் ஹசனின் அபார பந்து வீச்சால் சூப்பர் 8-ல் கால்பதித்தது வங்கதேசம் | T20 WC

கிங்ஸ்டவுன்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேபாளம் அணிக்கு எதிரான 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் கடைசி அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணியின் வெற்றியில் தன்சிம் ஹசன் சாகிப், முஸ்டாபிஸுர் ரஹ்மான் ஆகியோரது பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது.

மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 19.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 17,மஹ்மதுல்லா 13, ரிஷாத் ஹோசைன் 13, ஜாகர் அலி 12, தஸ்கின் அகமது 12, லிட்டன் தாஸ் 10 ரன்கள் சேர்த்தனர். நேபாளம் அணி உதிரிகள் வாயிலாக 10 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தது. இதில் 5 வைடுகள், 5 பைஸ்கள் அடங்கும்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்