24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: ஜெர்மனி - ஸ்காட்லாந்து மோதல்

முனிச்: ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த தொடரின் 17-வது பதிப்பு ஜெர்மனியில் இன்று தொடங்கி வரும் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் போட்டியை நடத்தும்ஜெர்மனி, நடப்பு சாம்பியனான இத்தாலி, கடந்த முறை 2-வது இடம் பிடித்த இங்கிலாந்து உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான இத்தாலி, ஸ்பெயின், குரோஷியா, அல்பேனியா அணிகள் உள்ளன.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்