சிஎஸ்கே அணிக்கு திரும்புகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்?!

ஐபிஎல் தொடரில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆடும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்தியா சிமெண்ட்ஸில் இணைந்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் திரும்புவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் உயர் செயல்திறன் மையத்தின் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த உயர் செயல்திற மையம் சென்னையின் புறநகர்ப்பகுதியில் வருகிறது. அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் இந்த மையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.

இந்த மாற்றத்தினால் இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்ட வீரர்கள் ஏலத்தில் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கேவுடன் இணைவதற்கான வலுவான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை வீரர்கள் ஏலத்தில் சிஎஸ்கேயால் அஸ்வினை வாங்க முடியாவிட்டால், வீரர்கள் ஏலத்திற்குப் பிறகு அவரை வாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்