அரையிறுதிக்கு இங்கிலாந்து தகுதி: வெளியேறிய அமெரிக்கா | T20 WC

பார்படாஸ்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது. ‘சூப்பர் 8’ குரூப் 2 போட்டியில் அமெரிக்காவை 10 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இங்கிலாந்து.

மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது. அமெரிக்கா 18.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி சார்பில் நிதிஷ் குமார் 30, கோரி ஆண்டர்சன் 29, ஹர்மீத் சிங் 21 ரன்கள் எடுத்தனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்