ஒரு ரன்னில் வெற்றியை தவறவிட்ட நேபாளம் | T20 WC

கிங்ஸ்டவுன்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நேபாளம் அணி ஒரு ரன்னில் வெற்றியை தவறவிட்டது.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ‘டி’ பிரிவில்நேற்று கிங்ஸ்டவுனில் நடைபெற்றஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நேபாளம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியை 7 விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்கள் என்ற நிலையில் மட்டுப்படுத்தியது நேபாளம் அணி.அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 49 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27, கேப்டன் எய்டன் மார்க்ரம் 15, குயிண்டன் டி காக் 10 ரன்கள் சேர்த்தனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்