பெனால்டியை கோட்டைவிட்ட ரொனால்டோ: அழுகையை  உவகையாக மாற்றிய போர்ச்சுகல் வெற்றி!

நடப்பு யூரோ கோப்பை 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்று ஆட்டத்தில் நேற்று ஸ்லோவேனியா அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதியில் நுழைந்தது போர்ச்சுகல்.

முழு நேர ஆட்டம் 0-0 என்று கோல் இல்லாத கடினமான ஆட்டமாக முடிந்தது. குறிப்பாக 105-வது நிமிடத்தில் ரொனால்டோ தனக்குக் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை தவற விட்டார், ஸ்லோவேனியா கோல்கீப்பர் ஆப்லாக் அற்புதமாகத் தடுக்க கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதார். ஆனால், பிறகு பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரு கோலை அடித்து கண்ணீரை சிரிப்புத் தருணமாக மாற்றினார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்