இன்று அமெரிக்க அதிபருக்கு நேர்ந்தது நாளை நமக்கும் நேரலாம்: ட்விட்டர் நிறுவனம் குறித்து எச்சரிக்கும் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா

இன்று அமெரிக்க அதிபருக்கு நேர்ந்தது நாளை நமக்கும் நேரலாம் என ட்விட்டர் நிறுவனத்தின் மீது தனது அதிருப்தியைத் தெரிவித்து, எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளார் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா.

முன்னதாக, நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விடுபடவிருக்கும் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதற்கு அவரின் ட்வீட்டே காரணம் என்று கூறப்பட்ட நிலையில் ட்விட்டர் நிர்வாகம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்