“என் இதயத்தின் ஆழத்திலிருந்து...” - ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ஹர்திக்!

புதுடெல்லி: மும்பையில் உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்திக் பாண்டியா, “இந்தியா, நீங்கள்தான் என்னுடைய உலகம். என்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து இந்த எல்லா அன்புக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணங்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன். மழையையும் பொருட்படுத்தாது, எங்களை கொண்டாட வெளியே வந்த உங்களுக்கு நன்றி. நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். நாம் 140 கோடி பேருமே சாம்பியன்ஸ். நன்றி மும்பை, நன்றி இந்தியா” என்று பதிவிட்டுள்ளார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்