ஆக.15-ல் சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்

சென்னை: ஆகஸ்ட் 15 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னை நேரு விளையாட்டரங்கில் 54-வது சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இதில் 1,300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த போட்டியின் வாயிலாக வரும் செப்டம்பர் 19 முதல் 22-ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்