ரயில்வேஸ் அணி 429 ரன் குவிப்பு

சென்னை: அகில இந்திய அளவில் 12 அணிகள் கலந்து கொண்டுள்ள புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - ஜார்க்கண்ட் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட் செய்த மத்திய பிரதேசம் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷுபம் குஷ்வா 87, அர்ஹாம் அகில் 57 ரன்கள் சேர்த்தனர். ஜார்க்கண்ட் அணி தரப்பில் ஷுபம் சிங், சவுரப் சேகர், விவேக் ஆனந்த் திவாரி, ஆதித்யா சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ரயில்வேஸ் - குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த ரயில்வேஸ் முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 429 ரன்கள் குவித்தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்