புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: 8 விக்கெட்களை இழந்து மும்பை தடுமாற்றம்

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் - மும்பை அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. பூபதி வைஷ்ண குமார் 63, சோனு யாதவ் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த டிஎன்சிஏ லெவன் அணி 117.3 ஓவர்களில் 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பூபதி வைஷ்ண குமார் 82, சோனுயாதவ் 39, அஜித் ராம் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி தரப்பில் ஹிமான்ஷு சிங் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்