லாட்வியா செஸ் போட்டியில் இனியன் சாம்பியன்

ஈரோடு: லாட்வியா நாட்டின் ரீகா நகரில் நடந்த 13-வது ரீகா டெக்னிகல் யூனிவர்சிட்டி சர்வதேச செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஈரோட்டைச் சேர்ந்த ப.இனியன் பங்கேற்றார். கடந்த 3-ம் தேதி முதல், 11-ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில், 24 நாடுகளில் இருந்து 240 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் இனியன் 10 புள்ளிகளை பெற்று பிளிட்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

Source : www.hindutamil.in



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்