'100 சதவீத உடற்தகுதியை பெற்ற பிறகே அணிக்கு திரும்புவேன்' - முகமது ஷமி

பெங்களூரு: 100 சதவீத உடற்தகுதியை பெற்ற பிறகே அணிக்கு திரும்புவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவர் காயமடைந்தார். கால் பகுதியில் ஏற்பட்ட அந்த காயத்தையடுத்து இந்திய அணி விளையாடிய சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாட முடியாமல் போனது. இந்தச் சூழலில் காயத்தில் இருந்து மீண்டு வரும் அவர், அணிக்கு திரும்புவதில் ஆர்வமாக உள்ளார். அதே நேரத்தில் உடற்தகுதியிலும் அதீத கவனம் கொண்டுள்ளார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்