45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி

புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி தனது 3-வது சுற்றில் ஹங்கேரியை எதிர்கொண்டது. முதல் ஆட்டத்தில் டி.குகேஷ் 54-வது காய் நகர்த்தலின் போது ஆடம் கோசாக்கை வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் ஆர்.பிரக்ஞானந்தா 63-வது காய் நகர்த்தலின் போது தமஸ்பானுஸை தோற்கடித்தார்.

தொடர்ந்து அர்ஜுன் எரிகைசி 33-வது காய் நகர்த்தலின் போது பீட்டர் புரோஹாஸ்காவை வென்றார். அதேவேளையில் விதித் குஜராத்தி - பாப் கபோர் மோதிய ஆட்டம் 26-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. முடிவில் இந்திய ஆடவர் அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்