பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.75 லட்சம் பரிசு

புதுடெல்லி: பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.75 லட்சம் பரிசுத் தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார். மேலும் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும் வழங்கப்பட்டது.

பாரிஸ் நகரில் கடந்த 8-ம் தேதி முடிவடைந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை வென்று சாதனை படைத்ததுடன் பதக்கப் பட்டியலில் 18-வதுஇடத்தைப் பிடித்தது. இந்நிலையில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பெரும்பாலானோர் நேற்று தாயகம் திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்