துராந்த் கோப்பை | சாம்பியன் பட்டம் வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட் கால்பந்தாட்ட அணி!

கொல்கத்தா: நடப்பு துராந்த் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது நார்த்ஈஸ்ட் யுனைடெட் கால்பந்து கிளப் அணி. இதில் மோஹன் பகான் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி.

கடந்த ஜூலை 3-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் துராந்த் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. குரூப் சுற்று மற்றும் நாக்-அவுட் சுற்று என 43 போட்டிகள் நடைபெற்றன. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடர் கடந்த 1888-ல் தொடங்கியது. ஆசியாவில் நடைபெறும் பழமையான கால்பந்து தொடராக அறியப்படுகிறது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்