காஞ்சிபுரம் டு பாரிஸ்: இடையூறுகளை தகர்த்தெறித்து தாயகத்துக்குப் பெருமை சேர்த்த துளசிமதி!

காஞ்சிபுரம்: “மாற்றுத் திறனாளியான உனக்கு விளையாட்டெல்லாம் எதற்கு?” என்று அலட்சியமாக கேட்டவர்களை எல்லாம் வியக்க வைக்கும் விதமாக பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவி துளசிமதி.

காஞ்சிபுரம் - பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி (24). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். கை பாதிக்கப்பட்ட துளசிமதி பேட்மிண்டனில் சிறுவயது முதலே ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தை முருகேசன் விளையாட்டுக்கு பயிற்சி அளிப்பவர். தனது மகளுக்கு பேட்மிண்டன் ஆர்வம் இருப்பதை அறிந்து அதில் அவருக்கு பயிற்சி அளித்தார். பள்ளி படிப்பு முடியும் வரை அவரே மகளுக்கு பயிற்சியாளராக இருந்தார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்