துலீப் டிராபி: ருதுராஜ் கெய்க்வாட், மானவ் சுதர் அபாரம் - இந்தியா ‘சி’ அபார வெற்றி!

அனந்தபூரில் நடைபெற்ற துலீப் டிராபி போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமை இந்தியா டி அணியை, ருதுராஜ் கெய்க்வாட் தலைமை இந்தியா சி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 164 ரன்களுக்கும் 2-வது இன்னிங்சில் 236 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆக, இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 168 ரன்களையும் பிறகு வெற்றி இலக்கான 233 ரன்களை 6 விக்கெட்டுகளை இழந்து அடைந்தது. ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கத்தில் இறங்கி 48 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 46 ரன்களை அதிரடியாக எடுத்து ஆஃப் ஸ்பின்னர் சரன்ஷ் ஜெயினிடம் ஆட்டமிழந்தார். ஆனால் இந்தத் தொடக்கம் மிக முக்கியமாக அமைந்தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்