பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் 17-வதுபாராலிம்பிக் போட்டியில், பெண்கள் பேட்மிண்டன் ஒன்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கலமும் வென்று சாதனைப் படைத்துள்ளனர். இவர்களுக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், வெண்கலம் வென்ற மனிஷா ராமதாஸ், நித்ய ஸ்ரீ சிவன்ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். அவர்களது அர்ப்பணிப்பும்,மனவலிமையும், லட்சக்கணக்கானோரை ஊக்கப்படுத்தியுள்ளது. இந்த வெற்றி தேசத்துக்கு பெருமைசேர்த்துள்ளது. எப்போது ஜொலித்துக்கொண்டே இருங்கள்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்