செஸ் ஒலிம்பியாட் புடாபெஸ்டில் தொடங்கியது

புடாபெஸ்ட்: ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடங்கியது.

இதில் ஹரிகா, ஆர்.வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணியும், டி.குகேஷ், விதித் குஜராத்தி, ஆர்.பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா ஆகியோரை உள்ளடக்கிய இந்தியஆடவர் அணியும் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக ஓபன் பிரிவில் 191 அணிகளும், மகளிர் பிரிவில் 180அணிகளும் கலந்து கொண்டுள்ளன. இந்த போட்டி 11 சுற்றுகளை கொண்டதாகும்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்