புதுடெல்லி: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டத்தை மாற்றிய தருணம் என்றால் அது சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச்தான் என ஜான்ட்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் கடைசி ஓவரின் முதல் பந்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரை லாங் ஆஃப் திசையில் கேட்ச் பிடித்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ். அந்த கேட்ச் இந்திய அணிக்கு கோப்பையை உறுதி செய்தது. சூர்யகுமார் யாதவ் பவுண்டரி லைனை மிதித்தார் என்றும், மிதிக்கவில்லை என்றும் விவாதங்கள் இன்றும் எழுவதுண்டு.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்