வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி! 

கான்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்துள்ளது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் 2013 தொடங்கி இன்று வரை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனை படைத்துள்ளது இந்தியா.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களைச் சேர்த்தது. 2 மற்றும் 3 நாட்களில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. 4-வது நாள் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் 233 ரன்களைச் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிவேக ரன் குவிப்பில் ஈடுபட்டு வரலாற்று சாதனை படைத்து. இதன் மூலம் 285 ரன்களில் 9 விக்கெட் இழப்புக்கு இந்தி இந்திய அணி டிக்ளேர் செய்தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்