ஒரு காலத்தில் நம்பர் 1 பேட்டராகத் திகழ்ந்த விராட் கோலி கடைசியில் ஒரு தாழ்வான ஃபுல்டாசைக் கூட சரியாகக் கணிக்க முடியாமல் ஸ்கூல் கிரிக்கெட்டர் போல் போல்டு ஆகி வெளியேறியது கவலையளிப்பதாக இருப்பதாக சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியதாவது: “புனே டெஸ்ட் போட்டியில் கோலி ஆடிய ஷாட் தேர்வை விடவும் மோசமானது அவரது பந்து பற்றிய கணிப்பு. இதுதான் எனக்குக் கவலையளிக்கிறது. பந்தின் லெந்த்தைக் கணிப்பது விராட் கோலிக்குப் பிரச்சனையாக இருந்து வருவதைப் பார்க்கின்றேன். அவ்வளவு ஃபுல் லெந்த்தாக இல்லாத பந்துகளுக்கும் கோலி முன்னால் காலை நீட்டி ஆடுவது குறித்து லட்சம் முறை நான் பேசிவிட்டேன்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்