பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் எடுத்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100, கே.எல்.ராகுல் 77 ரன்கள் விளாசினர். இதையடுத்து 534 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்