மெல்பர்ன்: வரும் 26-ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில், இதில் காயம் காரணமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்