மும்பை: இந்தியன் சூப்பர் லீக் தொடரில் மும்பையில் உள்ள மும்பை கால்பந்து அரினாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதின. மும்பை அணி 4-3-3 என்ற பார்மட்டிலும், சென்னையின் எஃப்சி 3-4-1-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. 5-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் இர்பான் யத்வாத் உதவியுடன் பந்தை பெற்ற லூக்காஸ் பிரம்பில்லா, பாக்ஸின் மையத்தில் இருந்து அடித்த பந்து இடைமறிக்கப்பட்டது.
8-வது நிமிடத்தில் மும்பை அணியின் வான் நீஃப், பந்தை விரைவாக கடத்திச் சென்று பாக்ஸ் பகுதிக்குள் நுழைய முயன்றார். அப்போது அவர், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த சூழ்நிலையில் சென்னையின் எஃப்சி அணியின் ரியான் எட்வர்ட்ஸ் பந்தை முழுமையாக விலக்கிவிடத் தவறினார். அவரது காலில் பட்டு விலகிச் சென்ற பந்தை பெற்ற மும்பை அணியின் நிகொலாஸ் கரேலிஸ், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து கோல் வலையின் இடதுபுற கார்னரை துளைத்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்