சென்னை: “செஸ் மிகவும் அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் அணுக வேண்டும். இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது” என்று உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் கூறியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று (டிச.16) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா குகேஷுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள், குகேஷ் படித்த தனியார் பள்ளியின் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் குகேஷ் கலந்துகொண்டார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்