ஜெய்ஸ்வால் மோசடி தீர்ப்பு: மவுனம் கலைத்த பிசிசிஐ!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பெரிய காரணமாக எழுந்திருப்பது ஜெய்ஸ்வாலுக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த டிவி அம்பயர் செய்கத் ஷர்ஃபுத்தவ்லா கொடுத்த மோசடி தீர்ப்பே காரணம் என்று கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ‘காட்சிப்பிழை’யில் ஏற்பட்ட மோசடி என்று கடுமையாகச் சாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்