இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி டிரா

பிரிஸ்பன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான பிரிஸ்பன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா ஆனது. கடைசி நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியை மேற்கொண்டு நடத்த முடியாத சூழலில் நடுவர்கள் டிரா என அறிவித்தனர்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி பிரிஸ்பனில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்