வரவிருக்கும் ரஞ்சி டிராபி முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் ஆடப்போவது உறுதியான நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையாக சொதப்பினாலும் ஓய்வு அறிவிக்க மனம் வராத விராட் கோலி தன் ஃபார்மை மேம்படுத்திக் கொள்ள டெல்லி அணிக்காக ஆடுவார் என்று உத்தேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், கோலி இன்னமும் ஆடுவாரா மாட்டாரா என்ற சந்தேகமே நீடிக்கிறது.
அவர் லண்டனுக்குச் சென்று விட்டார். அவர் இனி இங்கு வந்து உள்நாட்டுக் கிரிக்கெட் ஆடுவதெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. விராட் கோலி கடைசியாக டெல்லி அணிக்காக ரஞ்சி போட்டியில் 2012-ம் ஆண்டு ஆடியதோடு சரி. உள்நாட்டுக் கிரிக்கெட்டையே ஏறக்கட்டி விட்டார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்