முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
முல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 41.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 68.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சவுத் ஷகீல் 84, முகமது ரிஸ்வான் 71 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்