மும்பை: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரை கேப்டனாக ரோஹித் சர்மாவே தொடர்வார் என்றும், அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் தெரியவந்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில தொடர்களில் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் மோசமாக உள்ளது. அவரது தலைமையிலான பல போட்டிகளில் தோல்வி கண்டது. மேலும் அவரது பேட்டிங்கும் மோசமாகியுள்ளது. இதுதொடர்பாக விமர்சகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி போட்டித் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்