கிரிக்கெட் பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்வதால் விளையாட்டில் கவனம் சிதறுகிறது என்பதால் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல விதிமுறைகளில் சிலபல கெடுபிடிகளைப் புகுத்த உள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).
அதாவது 45 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் கொண்ட தொடர்களின் போது வீரர்களுடன் அவரது மனைவி, குழந்தைகள் ஆகியோர் மொத்தமே 14 நாட்கள் தங்கி இருக்கலாம். ஆனால், இந்த 14 நாட்கள் தொடரின் முதல் 2 வாரங்கள் அல்ல. முதல் இரண்டு வாரங்களுக்கு வீரர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. சிறிய தொடர்களின் போது வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் அதிகபட்சம் ஒரு வாரம் தங்கியிருக்கலாம்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்