லாகூர்: ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஐசிசி நடத்தும் 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் ரன் சேஸில் வரலாற்று சாதனை படைத்து இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜாஷ் இங்கிலிஸ் அதிரடி சதம் விளாசினார்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 4-வது போட்டியில் இன்று (பிப்.23) ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச முடிவு செய்தது. அந்த அணியில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் போன்ற வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை. அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துகிறார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்