18-வது ஐபிஎல் சீசன் இன்று (மார்ச் 22) கோலாகலமாக தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த சீசனின் சுவாரஸ்யங்கள் குறித்து பார்க்கலாம்.
7 புதிய கேப்டன்கள்: ரஜத் பட்டிதார் (பெங்களூரு), ரியான் பராக் (ராஜஸ்தான்), அக்சர் படேல் (டெல்லி), அஜிங்க்ய ரஹானே (கொல்கத்தா), ரிஷப் பந்த் (லக்னோ), ஸ்ரேயஸ் ஐயர் (பஞ்சாப்), சூர்யகுமார் யாதவ் (மும்பை) ஆகியோர் இந்த சீசனில் புதிய கேப்டன்களாக களமிறங்குகின்றனர். இதில் சூர்யகுமார் யாதவ், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிக்கு மட்டும் கேப்டனாக செயல்பட உள்ளார். அதேபோன்று ரியான் பராக், ராஜஸ்தான் அணியின் முதல் 3 ஆட்டங்களுக்கு மட்டும் அணியை வழிநடத்த உள்ளார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்