நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பஞ்ச்குலாவில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றம்

புதுடெல்லி: ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா, ஜேஎஸ்​டபிள்யூ ஸ்போர்ட்​ஸ், இந்​திய தடகள கூட்​டமைப்பு (ஏ.எஃப்​.ஐ) மற்​றும் உலக தடகள சம்​மேளனம் ஆகிய​வற்​றுடன் இணைந்து ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ போட்​டியை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார். இந்த போட்​டியை நீரஜ் சோப்ரா தனது சொந்த மாநில​மான பஞ்ச்​குலா​வில் நடத்த இருந்​தார்.

இந்​நிலை​யில், அந்த மைதானத்​தில் உள்ள மின்​விளக்​கு, உலக தடகள சம்​மேளனம் நிர்​ண​யித்​துள்ள அளவு​கோல்​களின் படி இல்​லாத​தால் தற்​போது போட்டியை பெங்​களூருவுக்கு மாற்றி உள்​ளனர். இதன்​படி பெங்​களூரு​வில் உள்ள கண்​டீரவா மைதானத்​தில் வரும் மே 24-ம் தேதி போட்டி நடை​பெறுகிறது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்