குமி: தென் கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர், பந்தய தூரத்தை 8:20.92 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
ஜப்பானின் யுடாரோ நினே (8:24.41) வெள்ளிப் பதக்கமும், கத்தாரின் ஜகாரியா எலாஹ்லாமி (8:27.12) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 36 வருடங்களுக்குப் பிறகு ஸ்டீப்பிள்சேஸில் இந்திய வீரர் தற்போதுதான் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கடைசியாக 1989-ம் ஆண்டு தினா ராம் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதற்கு முன்னதாக 1975-ம் ஆண்டு ஹர்பெல் சிங் முதன்முறையாக தங்கம் கைப்பற்றியிருந்தார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்