ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம்

குமி: தென் கொரி​யா​வின் குமி நகரில் ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆடவருக்​கான 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீப்​பிள்​சேஸில் இந்​தி​யா​வின் அவி​னாஷ் சேபிள் தங்​கப் பதக்​கம் வென்று சாதனை படைத்தார். அவர், பந்​தய தூரத்தை 8:20.92 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்​தார்.

ஜப்​பானின் யுடாரோ நினே (8:24.41) வெள்​ளிப் பதக்​க​மும், கத்​தா​ரின் ஜகாரியா எலாஹ்லாமி (8:27.12) வெண்​கலப் பதக்​க​மும் கைப்​பற்​றினர். ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப்​பில் 36 வருடங்​களுக்​குப் பிறகு ஸ்டீப்​பிள்​சேஸில் இந்​திய வீரர் தற்​போது​தான் தங்​கப் பதக்​கம் வென்​றுள்​ளார். கடைசி​யாக 1989-ம் ஆண்டு தினா ராம் தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தார். அதற்கு முன்​ன​தாக 1975-ம் ஆண்டு ஹர்​பெல் சிங் முதன்​முறை​யாக தங்​கம் கைப்​பற்​றி​யிருந்​தார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்