ஐபிஎல் அணிகள் தற்காலிகமாக மாற்று வீரர்களை சேர்க்கலாம்: விதிகள் சொல்வது என்ன?

சென்னை: இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் 2025 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில், தேதிகள் மாற்றப்பட்ட காரணத்தால் விளையாட முடியாத வெளிநாட்டு வீரர்களுக்கு மாற்றாக வேறு வீரர்களை 10 ஐபிஎல் அணிகளும் சேர்க்கலாம் என ஐபிஎல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. அந்த புதிய விதிகள் சொல்வது என்ன என்பது குறித்து பார்ப்போம்.

மே 17 முதல் ஜூன் 3-ம் தேதி வரையில் ஐபிஎல் 2025 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த மாற்றம் காரணமாக பல்வேறு அணிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள், தாயகத்துக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்