பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ்: ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 15 புள்ளிகளை பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னறே வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் பஞ்சாப் அணி உள்ளது. பஞ்சாப் அணி கடைசியாக கடந்த 8-ம் தேதி டெல்லி அணியுடன் தரம்சாலாவில் மோதியது. ஆனால் இந்த ஆட்டம் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்