புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பிளே ஆஃப்சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 12 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 9 தோல்விகளுடன் 6 புள்ளிகளை பெற்று 10 அணிகள் கலந்து கொண்டுள்ள தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 10 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்