பும்ரா, பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு: 465 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழப்பு

லீட்ஸ்: இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து அணி 465 ரன்​களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்​பிரீத் பும்​ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபார​மாக பந்​து​வீசி விக்​கெட்​களைச் சாய்த்​தனர்.

இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்​தில் கடந்த 20-ம் தேதி தொடங்​கியது. முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 471 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய அணி சார்​பில் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 101, கேப்​டன் ஷுப்​மன் கில் 147, ரிஷப் பந்த் 134 ரன்​கள் குவித்​தனர். இங்​கிலாந்து அணி தரப்​பில் டங், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 4 விக்​கெட்​களை​யும், பிரைடன் கார்​ஸ், ஷோயிப் பஷீர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் வீழ்த்​தினர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்