லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 22-ம் நிலை வீரரான இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலியுடன் மோதினார்.
3 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-7 (6-8), 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்