துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

அன்மோல் (580), ஆதித்யா மல்ரா (579), சவுரப் சவுத்ரி (576) ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,735 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்