
ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நடத்திய சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையால் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது நிச்சயமற்றதாக இருந்தது. எனினும் இந்த தொடரில் கலந்து கொள்வதற்கு பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்